ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப்பதிப்பகம், மதுரை.
புகை பிடித்தல் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும், புகைப்பழக்கம் ஆளையே கொல்லும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் சிகரெட் பாக்கெட்டுகள், பீடி கட்டுகளில் பிரசுரிக்கப்பட்டாலும் அந்த பழக்கத்தில் இருந்து மக்களை அதனால் முழுமையாக விடுவிக்கமுடியவில்லை. உலகப் புள்ளி விவர நிறுவனத்தால் வெளியிடப்பட்ட புதிய அறிக்கை ஒன்று, இந்தியாவில் 42 சதவிகித ஆண்கள் சிகரெட் புகைக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது. உலக அளவில் அதிக ஆண்கள் புகைப்பிடிக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 13ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்ட சுமார் 267 மில்லியன் பேர் புகையிலையைப் பயன்படுத்துகின்றனர்; அதில் சுமார் 11 கோடி பேர் சிகரெட் பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றனர்.
கலைமாமணி, பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன்
குட்மார்னிங் தாத்தா... நீரின்றி அமையா உலகு..இதக் கேட்குறப்பவே ஹேப்பியா இருக்கு. அது இருக்கட்டும்.. நீ தண்ணீரே குடிப்பதில்லையா? ஸ்கூல்பேகிலும் தண்ணீர்பாட்டில் அப்படியே இருக்கே.. ஒரு ஜுஸ், ஒரு கூல்ட்ரிங்க்ஸ் இப்படி வச்சுவிட்டிருந்தா பாட்டில் காலி ஆயிருக்கும். தண்ணிதான தாத்தா.. அதக் கட்டாயம் குடிக்கவேண்டுமா? அப்படிச் சொல்லாதே . நிச்சயமா குடிக்கணும். முதல்முறையாக தண்ணீர் குடிப்பதற்கும் ஹார்மோன் சுரப்பதற்கும் உள்ள தொடர்பு குறித்து இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல்ஜான் மூர்ஸ் பல்கலை விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். 18 முதல் 35 வயதுவரையுள்ள 100 ஆரோக்கியமான ஆண்கள், பெண்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். அவர்களில் ஒருபகுதியினருக்கு தினமும் 1.3 லிட்டர்தண்ணீரும், மற்றொருபிரிவினருக்கு 4.4 லிட்டர்தண்ணீரும் கொடுத்தனர். தொடர்ந்து ஒருவாரம் அவர்களை கண்காணித்தனர்.